டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (11:37 IST)
அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்தாகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.
 
தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்பவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (எச்-4 விசாதாரர்களுக்கு) அங்கு வேலை பார்ப்பதற்கான அனுமதி ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.

டிரம்பின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அது பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments