Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரி வேலை செய்த இந்தியர்கள்: ஏமாற்றம் அடைந்த அமெரிக்கர்கள்

Advertiesment
நரி வேலை செய்த இந்தியர்கள்: ஏமாற்றம் அடைந்த அமெரிக்கர்கள்
, வியாழன், 6 அக்டோபர் 2016 (11:05 IST)
மும்பையில் உள்ள கால்செண்டரில் அமெரிக்கர்களை இந்தியாவில் இருந்து தந்திரமான முறையில் ஏமாற்றி பணம் ஈட்டியுள்ளனர்.


 

 
கால்செண்டர்களில் பொதுவாக 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். மும்மை மிரா சாலை பகுதியில் மூன்று கால்செண்டர்கள் உள்ளது. அதில் 600க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
 
இவர்களால் அமெரிக்காவில் உள்ள பல பேர் பண மோசடிக்கு ஆளானதாக புகார் எழுந்தது. இதையடுத்து தானே கால்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
 
இந்த மூன்று கால் சென்டர்களிலும் உள்ள ஊழியர்களுக்கு, அமெரிக்கர்கள் பேசுவது போல் ஆங்கிலம் பேசவும், அந்நாட்டினரை போனில் தொடர்பு கொண்டு அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போன்று பேசவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 
கால்செண்டர் நிறுவனங்கள் ஊழியர்கள் மூலம் அமெரிக்கர்களிடம் நீங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி பண மோசடி செய்துள்ளனர்.
 
இதன்மூலம், இந்த கால் சென்டர்கள் ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபாய் என, ஓராண்டுக்கும் மேலாக பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.
 
காவல்துறையினர் இதுதொடர்பாக சுமார் 70 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஆதங்கம்: என் அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை!