Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
சனி, 19 ஏப்ரல் 2025 (18:26 IST)
கனடாவில் இந்திய மாணவி ஒருவர், பேருந்துக்காக காத்திருந்தபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கனடாவில் உள்ள ஒண்டோரியா அருகே உள்ள ஹாமில்டன் பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில், இந்தியாவை சேர்ந்த 21 வயது மாணவி படித்து வந்தார்.
 
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, அவர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், அங்கு கருப்பு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சரமாரியாக இந்திய மாணவி மிது துப்பாக்கி சூடு நடத்தி தப்பித்து சென்றனர்.
 
அந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் கொலைக்காரர்களை கண்டுபிடிக்க, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், விசாரணையை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்திய மாணவியை திட்டமிட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்வதற்காக வந்தவர் தவறுதலாக இந்த மாணவியை கொலை செய்தார்களா? என்பதைக் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
உயிரிழந்த மாணவி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம், மாணவியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments