Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்களைக் கண்டறியும் ஆடை? இந்திய விஞ்ஞானியின் சாதனை முயற்சி

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (19:37 IST)
மனித உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து மருத்துவர்களுக்கு அனுப்பும் புதிய வகை ஆடைகள் தயாரிப்பில் அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி முன்னேற்றம் கண்டு அதை சோதனை செய்து வருகிறார்.


 

 
அமெரிக்காவின் ரோட் தீவு பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றும் மன்கோடியா, மனிதன் உடுத்தும் ஆடைகளில் சென்சார்களைப் பொருத்தி, அதன்மூலம் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டறிய முடியும் என்று நிரூபித்துள்ளார். இந்தவகை சென்சார்கள் உடலின் வெப்பநிலை மற்றும் வளர்சிதை மாற்றங்கள் உள்ளிட்டவைகள் குறித்த தகவல்களை மருத்துவர்களுக்கு அனுப்பும் வல்லமை பெற்றவை.
 
இதுகுறித்து மன்கோடியா கூறியதாவது:-
 
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றத்தை ஆடைகளை வைத்தே கணிப்பது சாத்தியமாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் க்ளவுஸ்கள், பார்க்கின்ஸன் நோயின் அறிகுறிகளான விரல் அதிர்வுகள், விறைப்பு உள்ளிட்டவைகளை அடையாளம் காணுவதில் வெற்றி கண்டுள்ளது. 
 
அதோடு செல்போனில் இணைக்கப்பட்டுள்ள அந்த கை உறைகள், உடலை பற்றிய தரவுகளை மருத்துவர்களுக்கு உடனடியாக அனுப்பும் திறன் பெற்றது. என்றார்.
 
மேலும், பக்கவாதம் உள்ளிட்ட வாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் மாற்றத்தைக் கண்காணிக்கும் காலுறைகளையும் மன்கோடியா தலைமையிலான குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments