சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

Prasanth K
புதன், 15 அக்டோபர் 2025 (16:09 IST)

சீனாவிற்காக அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை திருடியதாக இந்திய வம்சாவளியான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் வசித்து வரும் 64 வயதான இந்திய வம்சாவளி ஆஷ்லே அமெரிக்க அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றியவர். ஜார்ஜ் புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றிய ஆஷ்லே, அமெரிக்காவின் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் பல முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.

 

இவர் சமீபமாக சீன அதிகாரிகளுடன் அடிக்கடி சந்திப்பு நடத்தியதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் இவரது வீட்டை அமெரிக்கா பாதுகாப்புத் துறையினர் திடீரென புகுந்து சோதனை செய்த போது அங்கு அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் பல அவரால் கோப்புகளாக மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இதனால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, தேசத் துரோகம் உள்ளிட்டவற்றிற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments