சட்டவிரோதமாக தங்கிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டார்களா? அமெரிக்க அதிகாரி தகவலால் பரபரப்ப்பு..!

Siva
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (09:27 IST)
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கிய இந்தியர்கள், நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து, அமெரிக்காவில்  சட்ட விரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளின் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 18,000 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் இது குறித்து கூறிய போது, சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள், C-17 என்ற விமான மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
 
டெக்ஸாஸ், கலிபோர்னியா உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக பென்டகன் உறுதி செய்துள்ளது.  விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
அமெரிக்கா வரலாற்றில் முதல்முறையாக, சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டு மக்களை கண்டுபிடித்து, ராணுவ விமானங்கள் மூலம் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள், என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments