Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடா செல்லும் இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:48 IST)
கனடாவிற்கு மேல்படிப்பு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக் வெளியுறவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பை பறித்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் கனடா மக்கள் எண்ணுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியர்கள் எல்லோரையும் வெளியேற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கனடா செல்லும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது 
 
கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் வெளியுறவுத்துறை இந்த எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments