Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன்; உதவிக்கு பொருட்களை அனுப்பும் இந்தியா!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (11:41 IST)
ரஷ்யா நடத்தி வரும் போரால் உருகுலைந்துள்ள உக்ரைனுக்கு உதவி பொருட்களை வழங்கியுள்ளது இந்தியா.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்யா தான் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரஷ்ய அடையாள அட்டைகளை அளித்து அப்பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக மாற்றி வருகிறது.

கடந்த 6 மாத காலமாக நடந்து வரும் போரால் இருதரப்பு ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் உக்ரைன் பொதுமக்களும் ஏராளமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த பேரிடரில் இருந்து உக்ரைன் மீளும் வகையில் உலக நாடுகள் பல உதவிகளை அளித்து வருகின்றன.

ALSO READ: வெறித்தனமாய் துரத்தி வந்த நாய்கள்; நூல் இழையில் தப்பித்த சிறுவர்கள்!

அந்த வகையில் இந்தியா உக்ரைனுக்கு தேவையான மனிதநேய உதவிப் பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது உக்ரைன் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 7,725 கிலோ மனிதநேய பொருட்களை இந்தியா உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments