அதிமுகவை அழிப்பதுதான் முதல்வரின் இலக்கு..! – ஜெயக்குமார் ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (11:24 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்து அதிமுக ஜெயக்குமார் ஆவேசமாக பேசியுள்ளார்.

சமீப காலமாக அதிமுக பிரமுகர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.

ALSO READ: மாஜி அமைச்சர்கள் வீட்டில் அதிரடி ரெய்டு! காரணம் என்ன தெரியுமா?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் பலர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளுக்கு முன்பாக திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ரெய்டு சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “முதலமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிமுகவை ஒழித்து கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். எதிர்கட்சிகள் செயல்படாமல் இருக்க காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகின்றனர். மின்சார கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments