Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பாக். கதி அதோகதி... போரை தொடுத்த இந்தியா!!

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (11:19 IST)
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 200% வரி தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தூண்டுதல் இருந்துள்ளது.  
 
எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வந்தது. அதோடு, பாகிஸ்தானுக்கு 23 ஆண்டுகளாக வழங்கப்பட்ட மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்தது.  
 
இந்த அந்தஸ்து கொண்ட நாட்டு பொருட்கள் மீது வரி குறைவாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி பழங்கள், ஜிப்சம், கந்தகம், பதனிடப்பட்ட தோல், தாதுக்கள், தாது எண்ணெய், சிமெண்ட் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இதனால் இந்தியாவுடனான பாகிஸ்தானின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவில் வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments