Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - மொசாம்பிக் இடையே புதிய ஒப்பந்தங்கள்

இந்தியா - மொசாம்பிக் இடையே புதிய ஒப்பந்தங்கள்
, வியாழன், 7 ஜூலை 2016 (19:53 IST)
இந்தியா-மொஸம்பிக் ஆகிய நாடுகளுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


 

 
இந்திய பிரதமர் மோடி இன்று முதல் முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
 
முதல்கட்டமாக, அவர் மொசாம்பிக் நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் பிலிப் நியூசியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
அதன்பின், மொசாம்பிக் அதிபர் பிலிப் யூசி - இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
 
பின்னர் பேசிய மொசாம்பிக் அதிபர் பிலிப் யூசி “இந்தியப் பிரதமர் மோடியின்  வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் தோல்வியால் மதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை - வைகோ