Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது: பாக். கண்டனம்!

இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது:  பாக். கண்டனம்!
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:47 IST)
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது என பாகிஸ்தான் கண்டன் தெரிவித்துள்ளது. 
 
உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது. இந்நிலையில் பாகிஸ்தான தரப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
webdunia
இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. இது அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவோடு இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா.
 
இந்நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாதான் இலக்கு - விற்பனையாளர்களுக்கு வலை விரிக்கும் க்ளப் ஃபேக்டரி