Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை - பிரதமர் அதிரடி

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (12:19 IST)
பாகிஸ்தானில் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக கடந்த 18 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர்க்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
அதில் பேசிய அவர் நாட்டு மக்களுக்காக செல்விடுவதை விட, நாட்டை ஆள்பவர்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே செலவுகளை கட்டுப்படுத்த நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும். 
பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அந்த பணம் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
 
இந்நிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைச்சரவையின் கேபினட் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் சிறப்பு விமானம் பயன்படுத்த மாட்டோம் என இம்ரான் கான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
 
நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து விதமான அநாவசிய செலவுகளை குறைத்து, மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதி அளிப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments