Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராமரிப்பாளரை கொன்று தப்பிய புலிகள்; சுட்டு கொல்லப்பட்டதால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (16:30 IST)
இந்தோனேஷியாவில் பூங்கா பராமரிப்பாளரை கொன்று விட்டு தப்பிய புலிகள் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் சிங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு அழிந்து வரும் சுமத்ரா இன புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு சில நாட்களாக மழை பெய்து வந்ததால் புலிகளின் வசிப்பிடம் சேதமடைந்திருந்தது. அதை சரிசெய்ய பூங்கா பராமரிப்பாளர் சென்றபோது திடீரென இரண்டு பெண் புலிகள் அவரை தாக்கி விட்டு தப்பியுள்ளன.

புலிகள் கடித்து குதறியதில் பராமரிப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அந்த இரண்டு புலிகளில் ஒன்றை பாதுகாப்பாக பிடித்த நிலையில், மற்றொரு புலி மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் அதை சுட்டுக் கொன்றுள்ளனர். அரியவகை புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments