Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய மக்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன் - பாகிஸ்தான் பிரதமர் !

Advertiesment
இந்திய மக்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன் -  பாகிஸ்தான் பிரதமர் !
, சனி, 24 ஏப்ரல் 2021 (15:30 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில்., நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் விரையில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது;  இந்தியாவில் கொரொனாவால் மக்கள் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிரானப் போராடும் மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் விரையில் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்ஸிஜன் இறக்குமதி செய்ய வரி நீக்கம்! – மத்திய அரசு அறிவிப்பு