Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனோ வார்டில் சிகிச்சை பெறுவதாக ஏமாற்றிய கணவர்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (18:28 IST)
மனைவியை கொலை செய்துவிட்டு அனைவரையும் ஏமாற்றும் வகையில் தனது மனைவி கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவதாக மனைவியின் உறவினர்களை ஏமாற்றிய கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆண்டனி டேவிட் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது இதனை அடுத்து இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென அவரது மனைவியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து அவரது உறவினர்கள் சந்தேகப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அவரது கணவரிடம் விசாரணை செய்தபோது தனது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெறுவதாக கூறினார்
 
இதனை அடுத்து அவர் கூறிய மருத்துவமனை சென்று பார்த்தபோது அப்படி ஒரு நபர் சிகிச்சைக்கு வரவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறினார்கள். இதனை அடுத்து அந்தோணியை போலீசார் மேலும் விசாரணை செய்தபோது தனது மனைவியை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவரது படுக்கை அறையில் ரத்தக்கறையுடன் கூடிய துணி ஒன்றையும் போலீஸார் கண்டெடுத்தனர். இதனை அடுத்து அந்தோணி தனது மனைவியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் 

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments