Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 1974 பேர் கொரோனாவால் மரணம்: ஆடிப்போன அமெரிக்கா!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (07:20 IST)
அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1974 பேர் மரணம் அடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
 
அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 653 பேர் மரணம் கொரோனாவால் அடைந்துள்ளதாகவும், பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 644 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், போலந்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில்  637 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் 584 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளதாகவும் உலகிலேயே அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 181,099 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 46182 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும், இத்தாலியில் 36176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
 
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை  5,72,06,666 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை  13,64,754 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,96,94,917 பேர் இதுவரை மீண்டுள்ளனர் என்றும், உலகில் கொரோனா பாதிப்புடன் 1,61,46,995 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments