Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதி தீவை அழித்த நிலநடுக்கம்; 1,297 பேர் பலி! – உலக நாடுகள் அஞ்சலி!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:30 IST)
கரீபியன் கடல் தீவான ஹைதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரீபியன் தீவு கூட்டத்தில் முக்கியமான தீவு நாடான ஹைதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹைதியின் லெஸ் கெயஸ் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இதுவரை நிலநடுக்கத்தால் 1,297 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹைதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதி நாட்டில் நடந்த இந்த சோக சம்பவத்திற்கு உலக நாடுகள் பல அஞ்சலி செலுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments