Publish Date: Thu, 07 Apr 2022 (19:02 IST)
Updated Date: Thu, 07 Apr 2022 (19:03 IST)
ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே இரவில் ஆஸ்திரேலியாவில் பெய்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி நகரில் நேற்று ஒரே நாளில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது
அதுமட்டுமின்றி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி வருகின்றனர்.
சிட்னி மாநகரில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 1200 மில்லி மீட்டர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் 1227 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது