Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! – பக்கத்து நாடுகள் வரை உணரப்பட்டது!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (08:31 IST)
துருக்கியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டின் நர்டஹி நகரத்தின் அருகே 23 கி.மீ கிழக்கே இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. பொதுவாக 6.2 ரிக்டருக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் சேதம் விளைவிப்பவையாக உள்ளன.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

துருக்கியில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட அருகில் உள்ள நாடுகள் வரை உணரப்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments