Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதி அதிபர் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்க டாக்டர் கைது!?

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (08:31 IST)
ஹைதி அதிபர் ஜோவனல் மொயிஸ் கொல்லப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரீபியன் தீவு நாடான ஹைதியில் அதன் அதிபரான ஜோவனல் மொயிஸ் சில நாட்கள் முன்னதாக அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 4 பேரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் 28 பேர் கொண்டு குழு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 15 கொலம்பியர்கள் மற்றும் 2 அமெரிக்கர்கள் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோவனஸ் கொலை வழக்கில் முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டதாக அமெரிக்க டாக்டர் கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜொவனசை கைது செய்யவே ஹைதி வந்ததாகவும், பின்னர் திட்டத்தை மாற்றியதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசு நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments