Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அலை நிச்சயம்; வேண்டாம் அலட்சியம்! – இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (08:21 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல் அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் “எந்தவொரு தொற்றுக்கும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருந்திருப்பதை முந்தைய பரவல்களில் அறிய முடிகிறது. மூன்றாவது அலையை சமாளிக்க எல்லாரும் சேர்ந்து உழைக்க வேண்டியுள்ள இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதும், மக்கள் கூட்டமாக நடமாடுவதும் வேதனையாக உள்ளது. சுற்றுலா, புனித யாத்திரை போன்றவை தேவைதான் எனினும் சில மாதங்கள் காத்திருக்கலாம்” என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments