Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுமதியின்றி உள்ளே வர வேண்டாம்: மிரள வைக்கும் தாத்தாவின் வீடு

Advertiesment
அனுமதியின்றி உள்ளே வர வேண்டாம்: மிரள வைக்கும் தாத்தாவின் வீடு
, வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (15:41 IST)
வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கும் தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான்.... 
 
பாம்பு, ஆமை, முதலை, பூச்சிகள், விஷமுள்ள விலங்குகள் என மினி ஜூவாக தனது வீட்டை மாற்றி பிரான்ஸில் லூரே என்ற நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் இந்த 67 வயது தாத்தா. 
 
இரண்டு முதலைகள், ராட்சச ஆமை, நல்ல பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 400 விலங்குகள் இந்த தாத்தாவின் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த தாத்தாவிற்கு விலங்குகளின் காதலன் என்ற பட்டப்பெயரும் உண்டு. 
 
இந்த தாத்தாவின் விலங்குகள் குறித்தான நோக்கம் மற்றும் கொள்கையை பார்த்த பிரான்ஸ் அரசு, விலங்குகளை வளர்க்க அனுமதி கொடுத்துள்ளது. அதோடு, வெளியூர்களுக்கும் இந்த விலங்குகளை அழைத்து செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம்