Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளாவிய உணவு நெருக்கடி; ஐரோப்பாதான் காரணம்! – ரஷ்ய அதிபர் பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (08:42 IST)
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படும் புகாரை ரஷ்ய அதிபர் புதின் மறுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் 100 நாட்களை தாண்டியும் தொடர்ந்து இந்த போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து சமையல் எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதி என வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக அளவில் சில சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களின் தேவை அதிகமாக இருந்தாலும், ஏற்றுமதி குறைவாக உள்ளதால் விலை வேகமாக உயர்ந்துள்ளது. உணவு பொருட்கள் நெருக்கடி ஏற்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக பேசி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “உலகளாவிய உணவு சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும், அது சார்ந்த பிரச்சினைகளையும் மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் மீது திருப்பி விடுகின்றன. ரஷ்யா மீது அவர்கள் விதித்துள்ள பொருளாதார தடைகள்தான் உலக சந்தையை மோசமாக்கியுள்ளது.

உக்ரைனிலிருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுக்கவில்லை. உக்ரைனிலிருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்கும் என ரஷ்யா உறுதி அளிக்கிறது” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments