Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்ணை பலாத்காரம் செய்த போக்கிமான் கேரக்டர்

பெண்ணை பலாத்காரம் செய்த போக்கிமான் கேரக்டர்

பெண்ணை பலாத்காரம் செய்த போக்கிமான் கேரக்டர்
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (11:54 IST)
மாஸ்கோவில் ஒரு பெண், போக்கிமானில் வரும் ஒரு கேரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியான்டிக் என்ற நிறுவனம் உருவாக்கிய கம்ப்யூட்டர் கேம்ஸ்தான் போக்கிமான். இந்நிலையில், மாஸ்கோ காவல் நிலையம் ஒன்றில் போக்கிமான் கேரக்டர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேலும், அவர் கொடுத்துள்ள புகாரில், "நான் தூங்கப் போகும் முன்பு போக்கிமான் விளையாடிக் கொண்டிருந்தேன். பின்னர் தூங்கப் போய் விட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது, போக்கிமான் கேரக்டர் என் மீது படுத்திருந்தது. நான் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டேன்" என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்தப் புகாரை அப்பெண்ணின் கணவர் நம்பவில்லை. தனது மனைவியை நல்ல மன நல ஆலோசகரிடம் காண்பிக்கவுள்ளதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விளையாட்டானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளது. இந்தியா, சீனா தவிர்த்து மேலும் சில ஆசிய நாடுகளுக்கும் இது பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு: 52 வயது பெண் 46 ஆண்டுகள் கழித்து புகார்