Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு: 52 வயது பெண் 46 ஆண்டுகள் கழித்து புகார்

7 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு: 52 வயது பெண் 46 ஆண்டுகள் கழித்து புகார்
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (11:28 IST)
ஷெனாய் நகரை சேர்ந்த 76 வயதான லவகுமார் என்பவர் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக 52 வயதான பூர்ணிமா கோவிந்தரஜுலூ என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


 
 
கனடா வாழ் தமிழ் பெண்ணான பூர்ணிமா அளித்துள்ள அந்த புகாரில் தான்னுடைய சிறு வயதில், அதாவது கடந்த 1970 முதல் 1977 வரையிலான 7 ஆண்டுகள் தனது உறவினரான ஷெனாய் நகரை சேர்ந்த லவகுமார் என்பவர் தனக்கு உடல் ரீதியாக பாலியல் தொந்தரவு தந்ததாக கூறியுள்ளார்.
 
அப்போது தான் சிறு வயது என்பதால் என்னால் இது குறித்து புகார் தெரிவிக்க முடியவில்லை. பின்னர் கனடா சென்று குடியேறிவிட்டதாலும், பல்வேறு பிரச்சனைகளால் இந்த புகாரை இவ்வளவு தாமதமாக தருவதாக கூறியுள்ளார்.
 
மேலும், தற்போது குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறு செய்பவர் யாராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் புகார் அளித்ததாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 14-ம் தேதி இஸ்லாமாபாத்தில் செல்போன் சேவை தடை