Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனை சார்ஜ் போட்டு தலையணை அருகே வைத்து தூங்கிய சிறுமி பலி!

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (17:10 IST)
சார்ஜ் போட்டு தலையணைக்கு அருகே வைத்து தூங்கிய 14 வயது சிறுமி சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் பரிதாபமாக பலியானார்.
 
 
கசகஸ்தான் நாட்டில் ஆலு என்ற 14 வயது சிறுமி இரவில் தூங்கும் முன் செல்போனை சார்ஜ் போட்டு தலையணை அருகே வைத்துள்ளார். அந்த செல்போன் சார்ஜ் முழுவதும் ஏறி சூடாகியுள்ளது. இதனையடுத்து திடீரென அந்த செல்போன் வெடித்ததால் அருகில் தூங்கி கொண்டிருந்த சிறுமி ஆலு பரிதாபமாக உயிரிழந்தார்.
 
 
தலைக்கு மிக அருகில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்ததில் தலையில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 
செல்போனை தலையணைக்கு அருகில் வைக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. தலையணைக்கு அருகில் குறிப்பாக சார்ஜ் போட்டுவிட்டு தலையணைக்கு அருகில் வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments