பொம்மை துப்பாக்கி என நினைத்து தாயை சுட்ட சிறுமி

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (20:10 IST)
மேற்கு வங்கத்தில் சிறுமி பொம்மை துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால் தனது தாயை சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 
மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானாகுல் பகுதியைச் சேர்ந்த காகோலி ஜனா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்துள்ளார். அதை அவர் அவரது குழந்தையிடம் பொம்மை துப்பாக்கி என நினைத்து கொடுத்துள்ளார்.
 
சிறுமி அந்த துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்த போது தனது தாயை சுட்டுள்ளார். அதிலிருந்த தோட்டா தாயின் உடலில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காகோலி ஜனாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடப்பதுதான் வழக்கம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments