Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (20:03 IST)
சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
 
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை காவிரி போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் உளுந்தூர்பேட்டை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டத்தில், வேல்முருகன் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி நெய்வேலி தெர்மல் போலீஸார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
இதற்கிடையே, இந்த இரு வழக்குகளில் இருந்து ஜாமீன் கேட்டு வேல்முருகன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன் கைது செய்யப்பட்டிருக்கும் 2 வழக்குகளிலும் இருந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவிலில் தங்கியிருந்து அங்குள்ள காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments