Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (20:03 IST)
சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
 
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை காவிரி போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் உளுந்தூர்பேட்டை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டத்தில், வேல்முருகன் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி நெய்வேலி தெர்மல் போலீஸார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
இதற்கிடையே, இந்த இரு வழக்குகளில் இருந்து ஜாமீன் கேட்டு வேல்முருகன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன் கைது செய்யப்பட்டிருக்கும் 2 வழக்குகளிலும் இருந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவிலில் தங்கியிருந்து அங்குள்ள காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments