Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெர்மனி ரெயில் பயணிகள் மீது கத்திக் குத்து- 2 பேர் பலி

ஜெர்மனி ரெயில் பயணிகள் மீது கத்திக் குத்து- 2 பேர் பலி
, புதன், 25 ஜனவரி 2023 (23:13 IST)
ஜெர்மனியில்  ரெயில் பயணிகள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் 2 பஎர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் வடக்கு பகுதில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் பரோக்ஸ்டெட் என்ற ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தை அடுத்து, ஹம்பர்க் கீல் பகுதியில் ரயில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு