Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா! – பயணிகளுக்கு ஜெர்மனி, இத்தாலி தடை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:49 IST)
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் அந்நாட்டு பயணிகளுக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரொனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா வைரஸின் வீரியமடைந்த புதிய வகை வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளில் கொரொனாவின் வீரியமடைந்த வகையான பி.1.1.529 என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னாப்பிரிக்க பயணிகள் வர ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. புதிதாக பரவி வரும் இந்த வைரஸ் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments