Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் கருகலைப்பு உரிமை; நாடாளுமன்றத்தில் ஒப்புதல்!

Prasanth Karthick
புதன், 31 ஜனவரி 2024 (09:03 IST)
பெண்கள் கருகலைப்பு செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கும் மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



கர்ப்பமான பெண்கள் கருவை கலைப்பது உலக அளவில் பல நாடுகளில் குற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக கருகலைக்கும் செயல்களும் நடைபெறுகின்றன. அதேசமயம், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் கருகலைப்பு செய்வது தங்கள் உரிமை என பெண்கள் அமைப்புகள் பல போர்க் கொடி தூக்கி வருகின்றன.

அவ்வாறாக பிரான்சில் பெண்கள் கருகலைப்பு உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில் இதுகுறித்த சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது பெண்கள் கருகலைப்பு உரிமைக்கான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்ற கீழ்சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்து செனட் சபைக்கு அனுப்பப்பட்டு அங்கு பெரும்பான்மை ஆதரவு பெற்றால் சட்டமாக செயல்படுத்தப்படும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments