இனிமேலாவது ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க! அமைதிக்கு வந்த இஸ்ரேலுக்கு ஐ.நா அறிவுரை!

Prasanth K
வியாழன், 9 அக்டோபர் 2025 (09:45 IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் அமைதி ஒப்பந்தம் உண்டாகியுள்ள நிலையில் இருதரப்புக்கும் ஐ.நா அறிவுரைகளை வழங்கியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் 68 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக அமெரிக்க தலையீட்டில் அமைதி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்தி வந்தது.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை முறையாக கடைபிடிக்கும்படி ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரேஸ் அறிவுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர் “ஒப்பந்தத்தை முறையாக கடைபிடிக்குமாறு ஹமாஸை கேட்டுக் கொள்கிறேன். அனைத்து பணையக்கைதிகளையும் ஹமாஸ் கண்ணியமான முறையில் விடுவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் காசா மக்களுக்கு எந்த தங்கு தடையுமின்றி செல்வதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

சென்னை கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள்.. அதில் ஒருவர் கல்லூரி மாணவியா?

எம்.எல்.ஏ ஆகாமலேயே அமைச்சரானார் முகமது அசாரூதின்.. குவியும் வாழ்த்துக்கள்..!

திமுகவில் இருக்கும் பாதி பேர் தமிழர்களே அல்ல.. தமிழிசை செளந்திரராஜன்

தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல.. துறவியாக மாறிய பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments