Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோமாலியாவில் திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலி

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (18:12 IST)
சோமாலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில்  ஒன்று சோமாலியா. இந்த நாட்டில் கடும் வறட்சி நிலவும். ஆனால், கடந்த 2 வாரங்களாக இங்கு  கனமழை பெய்து வருகிறது.

இதனால், ஷபெல்லே  மற்றும் ஜூபா ஆகிய நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில், அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டடிடங்கள், உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. பாதுகாப்பை முன்னிட்டு, அபகுத்யில் வசித்து வந்த சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

இந்த எதிர்பாராத திடீர் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை  மீட்புப்படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கனமழையால் ஓரளவுக்கு வறட்சி குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments