Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மயக்க நிலையில் நோயாளி ; ஆட்டம் போட்ட செவிலியர்கள் - அதிர்ச்சி வீடியோ

Advertiesment
மயக்க நிலையில் நோயாளி ; ஆட்டம் போட்ட செவிலியர்கள் - அதிர்ச்சி வீடியோ
, புதன், 29 மார்ச் 2017 (14:38 IST)
அறுவை சிகிச்சை செய்யும் அறையில், ஒரு நோயாளி மயக்கத்தில் இருந்த போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆட்டம் போட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கொலம்பியாவின் போலீவார் எனும் பகுதியில் ஒரு மருத்துவமனை உள்ளது. அங்கு சமீபத்தில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நோயாளி அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மயக்க  மருந்தும் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நோயாளி மயக்க நிலையில் இருந்தார். அப்போது, அங்கிருந்த சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் ஆட்டம் போட்டுள்ளனர். 
 
இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் 5 பேர் மீது அந்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க மறுத்த சசிகலா: ஓபிஎஸ் பகீர் தகவல்!