Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 5 மாதம் சம்பள விடுமுறை: பின்லாந்து அதிரடி!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (10:35 IST)
சன்னா மரீன் - பின்லாந்து பிரதமர்
குழந்தை பிறந்தால் தாய்க்கு 5 மாதம் விடுமுறை வழங்குவது போல தந்தைக்கும் வழங்க பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

பெண் உறுப்பினர்களை அதிகமாக கொண்ட பின்லாந்து அரசு சமீப காலமாக பல்வேறு புதிய நடைமுறைகளை பின்லாந்தில் அமல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஊழியர்களில் வேலை நேரம் 6 மணி நேரமாகவும், வேலை நாட்கள் வாரத்திற்கு 4 நாட்களாகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்தால் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது போல, குழந்தையின் தந்தைக்கும் வழங்க பின்லாந்து அறிவித்துள்ளது. குழந்தைகளை பெண்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அதில் ஆண்களுக்கும் பங்கு உண்டு என்பதை ஏற்படுத்தவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பின்லாந்து அரசு கூறியுள்ளது. அரசின் இந்த புதிய நடைமுறைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments