Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளை திருமணம் செய்துக்கொடுக்க தனது கோர முகத்தை மாற்ற துடிக்கும் தந்தை

மகளை திருமணம் செய்துக்கொடுக்க தனது கோர முகத்தை மாற்ற துடிக்கும் தந்தை
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (18:32 IST)
வங்கதேசத்தை சேர்ந்த ஹாஷ்மோத் அலி என்பவர், மகளை திருமணம் செய்து கொடுக்க அவரது கோர முகத்தை மாற்ற தவித்து வருகிறார்.


 

 
வங்கதேசத்தை சேர்ந்த ஹாஷ்மோத் அலி(40) என்பவர், காட்டுக்குள் சென்று தேன் எடுப்பது, மீன் பிடித்தொழில் செய்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் காட்டுக்குள் சென்றபோது புலி ஒன்று அவரை தாக்கியது.
 
அதில் அவரது முகத்தின் ஒரு பக்க சதையை கடித்து குதறியது. எதிர்பாரதவிதமாக புலியின் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார். அவரது சிதைந்த முகத்தை சரி செய்ய பணம் இல்லாமல், மீண்டும் அதே தொழிலை தான் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது அவரது மகளுக்கு திருமண வயது நெருங்கி விட்டதால், அவருடைய தோற்றத்தை கண்டு யாரும் பெண் கேட்டு வருவதில்லை. அதில் மனமுடைந்த அலி தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்ற தவித்து வருகிறார்.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கூட்டம் இப்படிதான் நடத்தப்பட வேண்டும்' - போட்டி போட்ட மு.க.ஸ்டாலின்