Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 ஆண்டுகள் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த காம கொடூரனுக்கு 1,503 ஆண்டுகள் சிறை

4 ஆண்டுகள் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த காம கொடூரனுக்கு 1,503 ஆண்டுகள் சிறை
, திங்கள், 24 அக்டோபர் 2016 (14:29 IST)
4 ஆண்டுகளாக தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
 

 
அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 41 வயது நிரம்பிய ஒருவர் தன்னுடைய மகளைச் சிறுவயதில் இருந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது வயது 23.
 
2009ஆம் ஆண்டு மே முதல் 2013ஆம் ஆண்டு மே வரை 4 ஆண்டுகளாக, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இந்தக் கொடூரம் குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்து உள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரது தந்தையைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
அவர் மீது பிரெஸ்னோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அவரைக் கடந்த மாதம் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் சனிக்கிழமை தண்டனை விபரத்தை அறிவித்தது.
 
அதன்படி குற்றவாளியான தந்தைக்கு 1,503 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எட்வர்ட் சர்கிசியன் தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில் ’இந்தக் குற்றவாளி சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் தீபாவளியை மக்களுடன் கொண்டாட வேண்டும் : அப்பல்லோவில் குஷ்பு