Publish Date: Thu, 29 Jun 2017 (11:05 IST)
Updated Date: Thu, 29 Jun 2017 (11:15 IST)
இன்னும் சில நாட்களில் மரணத்தை சந்திக்கபோகும் தனது குழந்தையுடன் தந்தை சவக்குழியில் விளையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வயதேயான ஜாங் ஷின் லீ என்ற குழந்தைக்கு தலசீமியா என்ற நோய் தாக்கியுள்ளது. குழந்தையின் பெற்றோர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என 11,000 பவுண்டிற்கு அதிகமாக செலவு செய்துள்ளனர்.
குழந்தையை காப்பாற்ற சிகிச்சைகாக கடன் வாங்கியும் செலவுசெய்தனர். ஆனால், குழந்தையின் மரணத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை இங்கு தான் புதைக்க வேண்டும் என முடிவு செய்து தற்போது முதலே அந்த குழந்தையின் தந்தை வெட்டி வைத்த சவக்குழிக்குள் குழைந்தையோடு விளையாடி வருகிறார்.