Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மியான்மரில் ராணுவ அடக்குமுறை; ராணுவத்தின் பேஸ்புக் கணக்கு நீக்கம்!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (14:45 IST)
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ஆன் சாங் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய மியான்மர் ராணுவம், ஜனநாயக ஆட்சியை கலைத்து ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் கடும் ராணுவ பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஐ.நா சபை உள்ளிட்ட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் செயல்பட்டதாக மியான்மரின் அதிகாரப்பூர்வ கணக்கை பேஸ்புக் நிரந்தரமாக நீக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments