ஐரோப்பாவை பொசுக்கும் வெப்ப அலை..! ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:29 IST)
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை கடுமையாக வீசி வரும் நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட சில பகுதிகளில் அதீத வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெப்ப அலை தாங்க முடியாமல் மக்கள் பலர் உயிரிழந்து வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஸ்பெயினில் கடந்த வியாழக்கிழமை மட்டும் வெப்ப அலை தாக்கத்தால் 440 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மொத்தமாக வெப்ப அலையால் 1,027 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.

பிரான்சின் மேற்கு பகுதியில் 111.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் வரும் நாட்களில் வெப்பம் 104 பாரன்ஹீட்டை தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments