Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (10:25 IST)
உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் இங்கிலாந்தில் மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் தற்போது மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் மொத்த பாதிப்பு 179 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்துவதற்காக அந்நாட்டு சுகாதாரத்துறை தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments