Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான நபர்!

மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான நபர்!
, ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (14:53 IST)
இங்கிலாந்தில் மனைவிக்கு தெரியாமல் உயிரணு தானம் செய்த ஒருவர் 60 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.


 

 
இங்கிலாந்து நாட்டில் முறைப்படுத்தப்பட்ட உயிரணு தானம் செய்வதை விட முறைப்படுத்தப்பட்டாத உயிரணு தானம் செய்வது அதிகமாக உள்ளது. இந்நிலையில் மனைவிக்கு தெரியாமல் ஒருவர் நபர் உயிரணு தானம் செய்து 60 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.
 
முறைப்படுத்தப்பட்ட உயிரணு தானம் மற்றும் சிகிச்சை மூலம் குழந்தை பெற பல லட்சங்கள் செலவாகிறது. ஆனால் முறைப்படுத்தப்பட்டாத உயிரணு தானம் மூலம் வெறும் 3 ஆயிரம் ரூபாயில் கருத்தரித்து குழந்தை பெற முடியும்.
 
இதனால் இங்கிலாந்தில் முறைப்படுத்தப்படாத உயிரணு தானம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயிரணு தானம் செய்வோர் பேஸ்புக் குரூப்பில் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து உயிரணுவை தானம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
 
மேலும் முறைப்படுத்தப்பட்ட உயிரணு தானம் மையத்தில் வாரத்திற்கு இரண்டு முறைதான் உயிரணு தானம் செய்யப்படும். அதுவும் உடல் பரிசோதனைக்கு பின்தான் உயிரணு தானம் செய்யப்படும். இதனால் உலகம் முழுவதும் தற்போது முறைப்படுத்தப்பட்ட உயிரணு தானம் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவ்வாய் கிரகத்தில் வசித்தால் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையும் - எச்சரிக்கும் விஞ்ஞானி