Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப்பை பங்கமாய் கலாய்த்த இங்கிலாந்து ராணி.. என்ன காரணம்?

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:21 IST)
தன்னுடைய அரண்மனையை பாழாக்கிவிட்டதாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நகைச்சுவையாக புகார் அளித்துள்ளார். என்ன காரணம்??

கடந்த ஜூன் மாதம் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் இங்கிலாந்துக்கு அரச பயணமாக சென்றார், அப்போது டிரம்ப் வந்த ஹெலிகாப்டர் ஒரே நாளில் 2 முறை பங்கிங்காம் அரண்மனை அருகே தரையிறங்கியது. இதனால் அந்த அரண்மனையின்  முன் உள்ள புல்வெளியில் ஆழமான தடயங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார் மாரிசனை சந்தித்தபோது, ”என் புல்வெளியை பாருங்கள், எவ்வளவு பாழாகிகிடக்கிறது. இதற்கு அந்த டிரம்ப் தான் காரணம்” என டிரம்ப்பை கேலி செய்துள்ளார். இந்த தகவலை ஸ்காட் மாரிசன் வெளியிட்டுள்ளார்.

இனவாதம் குறித்து கருத்து தெரிவித்து, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் டிரம்ப், இங்கிலாந்துக்கு வருகை புரிந்தபோது, ஆயிரக்கணக்கானோர் அவர் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments