Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்துச் சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் டுவீட்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (21:02 IST)
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது ட்விட்டர். சமீப காலமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது.

முன்னதாக ட்விட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைய ட்விட்டர் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் என டீல் பேசி ய்உள்ளதாக  தகவல் வெளியான நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் அவர் வாங்க முன்வந்துள்ளார், டுவிட்டர் நிறுவனம்னும் ரூ. 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்த முடிவெடுத்துள்ளது.

இ ந்நிலையில் கருத்துச் சுதந்திரம் பற்றி எலான் மஸ்க்  பதிவிட்டுள்ளதாவது:  கருத்துச் சுதந்திரம் என நான் கூறியவுடன் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.   நான் கருத்துச் சுதந்திரம் என நான் கூறிய அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு எதிரான கருத்துகள் பரப்ப நான் எதிராவன். மேலும், ஒரு நாட்டின்  சட்டத்திற்கு எதிரான செயல்படுவது அந்த நாட்டின் மக்களுக்கு எதிராகச் செயல்படுவது ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments