Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.0 ஆக பதிவு

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (10:42 IST)
இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
 
கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. 
 
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. 
 
வீடுகளை இழந்த மக்கள் முகாம்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது மேலும் பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் உயிரிழதனர். மேலும் 5000க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று மீண்டும் ரிக்டர் அளவில் 6.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments