Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீர் டாக்டரான வாட்ச்மேன்: அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்

திடீர் டாக்டரான வாட்ச்மேன்: அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்
, செவ்வாய், 9 அக்டோபர் 2018 (07:46 IST)
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வாட்ச்மேன் ஒருவர் அடிப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக அரசு மருத்துவமனையில் வாட்ச் மேன்களும், துப்புரவு தொழிலாளர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. 
 
இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் காலில் அடிபட்டதற்கு சிகிச்சை பெற சென்றார். அங்கு அவருக்கு செக்யூரிட்டி ஒருவர் சிகிச்சை அளித்தார். இவர் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி மக்களை அதிர்ச்சியூட்டி இருக்கிறது. இதற்கு தற்பொழுதுவரை மருத்துவமனை நிர்வாகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான 9 மாதத்தில் மனைவியின் தலையை துண்டித்த கணவன்: அதிர்ச்சி தகவல்