Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லா விமானத்தால் மூடப்பட்ட விமான நிலையம்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (19:03 IST)
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஆளில்லா விமானம் ஒன்று சுற்றிசுற்றி பறந்துக் கொண்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு விமான நிலையம் சுமார் அரை மணி நேரம் வரை மூடப்பட்டது.


 

 
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஆளில்லா விமானம் ஒன்று சுற்றிசுற்றி பறந்துக் கொண்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது. 
 
பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதை சுற்றி 1 கி.மீ தூரம் வரை லேசர் ஒளி மற்றும் ஆளில்லா பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அந்நாட்டு அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
 
இருப்பினும், அதை மீறி சில நேரங்களில் ஆளில்லா மர்ம விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மேலும் இதேபோல் இதற்கு ஒருமுறை ஆளில்லா விமானம் பறந்து, விமான நிலையம் சுமார் 1 மணி நேரம் வரை மூடப்பட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எவ்வளவு தெரியுமா?

அ.தி.மு.க.-வில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள் – அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments