கட்டாரில் பணிபுரிந்த டாக்டர் பணிநீக்கம்? குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததன் விளைவு

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (18:55 IST)
கட்டார் நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த டாக்டர் ஒருவர் தனது முகநூலில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து நீக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கட்டார் நாட்டில் டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருப்பவர் டாக்டர் அஜித். இவர் சமீபத்தில் தனது முகநூலில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து தனது ஆதரவையும் அந்த சட்டம் குறித்த விளக்கத்தையும் தெரிவித்திருந்தார் 
 
இதனையடுத்து அங்கு உள்ள முஸ்லிம்கள் அவர் மீது கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் புகார் அளித்தனர். தொடர்ச்சியான வந்த புகாரை அடுத்து டாக்டர் அஜித் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக அவரிடம் லெட்டர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது
 
இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒருவர் குடியுரிமை சட்டம் குறித்து பேசினாலே அவரது வேலை பறிபோகும் நிலையில் உள்ளது என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிய வருகிறது என்று சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments