Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு

Advertiesment
11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:56 IST)
வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வட கொரியா நாட்டில் அவ்வப்போது புதுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வட கொரிய அதிபர் திடீரென ஒரு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி வட கொரிய நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என்றும் வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் பொதுமக்கள் அனைவரும் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்றும் மது அருந்துவது, பிறந்தநாள் கொண்டாடுவது உள்ளிட்ட எந்த கொண்டாட்டமும் நாடு முழுவதும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டுனர் உரிமம் உள்பட வாகன சான்றுகளை புதுப்பிக்க தேதி நீட்டிப்பு!